Sunday, July 15, 2012

ஜீவகாருணியமும் சித்தியும்

நம்முடைய தலைவராகிய கடவுளை நாமடைவதற்கு அவரெழுந்தருளி இருக்கும் கோட்டையின் சாவியாகிய அருள் வேண்டும். அவ்வருள் அன்பினாலல்லது வேறு வகையில் அடைவது அரிது. இவ்வன்பு ஜீவகாருண்யத்தா லல்லது ஜீவகாருண்யத்தின் லாபமே அன்பு. இந்த ஜீவகாருணிய முண்டாவதற்கு ஏது அல்லது துவாரம் யாதெனில் கடவுளுடைய பெருமையையும் தரத்தையும் நம்முடைய சிறுமையையும் தரத்தையும் ஊன்றி விசாரித்தலே. அன்னிய உயிர்களுக்கு இம்சை உண்டாகாது நடத்தலே ஜீவகாருணியம். இது தான் முத்தியடைவதற்கும் சித்தியடைவதற்கும் முதற்படியாய் இருக்கின்றது. ஆதலால் இதைப் பாதுகாத்தல் வேண்டும்.

No comments:

Post a Comment