Sunday, July 15, 2012

தேவாரம் – திருவாசகம் பெயர் விளக்கம்


தேவாரம் என்பது, தே – தயவு, ஆரம் – ஒழுங்கு ; தயா ஒழுங்கே தேவாரம்.


திருவாசகம் என்பது, மெய்ப்பொருள் நிரம்பிய வார்த்தை, மெய்ப்பொருளைத் தரும் வார்த்தை.

(திருஅருட்பா – உபதேசக் குறிப்புகள் 45, 46)

சிவம் என்பதன் பொருள்

சிவம் என்பதற்குப் பொருள் சச்சிதானந்தம்.
சச்சிதானந்த மென்பது சத்து, சித்து, ஆனந்தம். இதில் சிகரம் சத்து. வகரம் சித்து, மகரம் ஆனந்தம் ; சிகரம் எல்லாமுள்ளதாய் விளங்குவது, வகரம் எல்லாம் விளங்குவதாயுள்ளது, மகரம் இரண்டினாலும் நிரம்பிய இன்பம்.

(திருஅருட்பா – உபதேசக் குறிப்புகள் 49)

ஜோதி அகவல்( 01 - 22)

Part 1: 

Part 2: 

Part 3:
   
Part 4:

 Part 5:

 Part 6: 

 Part 7: 

 Part 8: 

Part 9: 

Part 10:

Part 11:

Part 12:

Part 13:

Part 14:

Part 15:

Part 16:

Part 17:
Part 18:
Part 19:
Part 20:
Part 21:

Part 22:

ஜீவகாருணியமும் சித்தியும்

நம்முடைய தலைவராகிய கடவுளை நாமடைவதற்கு அவரெழுந்தருளி இருக்கும் கோட்டையின் சாவியாகிய அருள் வேண்டும். அவ்வருள் அன்பினாலல்லது வேறு வகையில் அடைவது அரிது. இவ்வன்பு ஜீவகாருண்யத்தா லல்லது ஜீவகாருண்யத்தின் லாபமே அன்பு. இந்த ஜீவகாருணிய முண்டாவதற்கு ஏது அல்லது துவாரம் யாதெனில் கடவுளுடைய பெருமையையும் தரத்தையும் நம்முடைய சிறுமையையும் தரத்தையும் ஊன்றி விசாரித்தலே. அன்னிய உயிர்களுக்கு இம்சை உண்டாகாது நடத்தலே ஜீவகாருணியம். இது தான் முத்தியடைவதற்கும் சித்தியடைவதற்கும் முதற்படியாய் இருக்கின்றது. ஆதலால் இதைப் பாதுகாத்தல் வேண்டும்.

சிவ சிந்தனை

ஓம் சிவாயநம என்று சதா சிந்தித்துக் கொண்டிருத்தல் வேண்டும். இவ்வுலகம் அருட்சத்தி, பொருட்சத்தி, கிரியாசத்தி, யோகசத்தி, ஞானசத்தி மயமாக இருப்பதாகப் பார்த்துக்கொண்டிருத்தல் வேண்டும். யோகம் செய்ய வேண்டுவதில்லை. அதில் அழுந்தி விட்டால் மீளுவது கஷ்டம். சதா சிவக்கலப்பாய்க் கிடந்தாலும் மீளுதல் அருமை, மூடம் உண்டாக்கும். உண்மை.

ஓம் என்னும் எழுத்து பிரணவம் என்று சொல்லப்படும். படைத்தளித் தழிக்க வல்ல தலைவன் என்பதே அந்த ஓங்காரத்தின் பொருள்.

பிரணவம்

பிரணவத்தின் ஐந்து பாகம் யாவெனில் அகரம், உகரம், மகரம், விந்து, நாதம். பஞ்சமி என்னும் வாக்கு பிரணவத்தின்கண் இருந்து தோன்றியது. அதற்கு ஸ்தானம் மூலாதாரம். அதிலிருந்து தோன்றிய மற்ற நான்கும் சூக்குமை, பைசந்தி, மத்திமை, வைகரி. இவற்றிற்கு இடம் நாபி, இருதயம், கண்டம் லலாடம்.

விருப்பு வெறுப்பு

விருப்பு வெறுப்பு என்பதற்குப் பொருள்:

விருப்பென்பது யாது?

ஒன்றை வேண்டிப் பந்தப்பட்டு, பூரண லக்ஷியத்தை விட்டு, அதிசயமாகப் பார்த்து நிற்றல். இந்த விருப்பால் தானுங் கெட்டு, இதர வஸ்துவுங் கெட்டு, சாதனமுந் தடைப்பட்டுவிடும். எவ்வகையிலும் விருப்பென்பது கூடாது.

வெறுப்பென்பது யாது?

வேண்டாமை, துவேஷம், இதர வஸ்துவைப் பற்றாதிருத்தல். இந்த வெறுப்பால் இதரவஸ்துவிடத்தில் துவேஷந் தோன்றி ஜீவோபகாரத்தைத் தடை செய்யும். ஆகையால் வெறுப்புங் கூடாது. மேற்குறித்த இரண்டுமற்று, சத்துவமயமாய் நிற்றல் வேண்டும்.